சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மேகவர்ணன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் தலைவர்.தொல்.திருமா நிதி
கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சிப்பாசறை மாவட்ட துணை செயலாளர் தோழர் மேகவர்ணன்(36).உள்ளட்சிமன்ற தேர்தல் முரண்பாடு காரணமாக அதிமுக கட்சியை சார்ந்த சாதிவெறி கும்பல் அவரை படுகொலை செய்தது.விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்கும் பொதுகூட்டம் அன்று 12.7.12இரவு 9 மணிக்கு திண்டிவனம் அருகே நடைபெற்றது.எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கட்சி சார்பில் போராளி மேகவர்ணன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிதி வழங்கினார்.இதற்கு முன்னதாக 25,ooo, நிதி வழங்கியுள்ளார்.
