<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>விடுதலைச் சிறுத்தைகள் கட்சி</title>
	<atom:link href="http://vck.in/vck/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://vck.in/vck</link>
	<description>சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை</description>
	<lastBuildDate>Tue, 21 May 2013 05:44:20 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.2</generator>
		<item>
		<title>மே18 சர்வதேச இனப்படுகொலை நாள்-விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் நினைவேந்தல் பொதுக்கூட்டம்.</title>
		<link>http://vck.in/vck/?p=3581</link>
		<comments>http://vck.in/vck/?p=3581#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 05:44:20 +0000</pubDate>
		<dc:creator>முதல்வன்</dc:creator>
				<category><![CDATA[கூட்டங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://vck.in/vck/?p=3581</guid>
		<description><![CDATA[]]></description>
			<content:encoded><![CDATA[]]></content:encoded>
			<wfw:commentRss>http://vck.in/vck/?feed=rss2&#038;p=3581</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>காவிரி டெல்டா பாசன விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்! -எழுச்சித் தமிழர் வலியுறுத்தல்</title>
		<link>http://vck.in/vck/?p=3574</link>
		<comments>http://vck.in/vck/?p=3574#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 02:28:46 +0000</pubDate>
		<dc:creator>முதல்வன்</dc:creator>
				<category><![CDATA[அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://vck.in/vck/?p=3574</guid>
		<description><![CDATA[டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது கேள்விக் குறியாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பை மீண்டும் விசாரிக்கும்படி கோரப்போவதாக கர்னாடக காங்கிரஸ் கூறியிருப்பது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ” கடந்த பா.ஜ.க அரசு காவிரிப் பிரச்சனையில் கர்னாடக மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. நாளொன்றுக்கு பத்தாயிரம் கியூசெக்ஸ் தண்ணீர் திறந்துவிடுவதாக உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது தவறு. அது காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்புக்குக் காரணமாகிவிட்டது” என குற்றம் சாட்டியிருக்கும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில்<br />
மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது கேள்விக் குறியாகியுள்ள நிலையில்<br />
காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பை மீண்டும் விசாரிக்கும்படி<br />
கோரப்போவதாக கர்னாடக காங்கிரஸ் கூறியிருப்பது தமிழக மக்களை<br />
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ” கடந்த பா.ஜ.க அரசு காவிரிப் பிரச்சனையில்<br />
கர்னாடக மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. நாளொன்றுக்கு பத்தாயிரம்<br />
கியூசெக்ஸ் தண்ணீர் திறந்துவிடுவதாக உச்சநீதிமன்றத்தில்  ஒப்புக்கொண்டது தவறு.<br />
அது காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்புக்குக் காரணமாகிவிட்டது” என<br />
குற்றம் சாட்டியிருக்கும் கர்னாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ‘<br />
தமிழ்நாட்டுக்குக் கொடுப்பதற்குக்காவிரியில் தண்ணீர் இல்லை’ எனவும்<br />
தெரிவித்திருக்கிறார்.<br />
உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பு<br />
அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரும் தமிழகத்துக்கு உரிய நீரைத் தரமாட்டோம் என<br />
கர்னாடக காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.<br />
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே கர்னாடக காங்கிரஸ் தலைவர்<br />
இப்படிப் பேசியுள்ளார். மத்தியில்  இருக்கும் காங்கிரஸ் அரசும் இதே<br />
நிலைப்பாட்டைத்தான் எடுக்கும். கடந்தகால நடைமுறைகள் அதைத்தான்<br />
சுட்டிக்காட்டுகின்றன. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்கூட காவிரி மேலாண்மை<br />
வாரியத்தையோ, காவிரி கண்காணிப்புக்குழுவையோ இதுவரை மத்திய அரசு அமைக்கவில்லை.<br />
தேர்தல் லாபத்துக்காக மத்திய காங்கிரஸ் அரசு இப்படித் தமிழக மக்களின்<br />
உரிமையைப் பலிகொடுப்பது சரிதானா? என்பதைத் தமிழ்நாட்டிலிருக்கும்<br />
காங்கிரஸ்காரர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். கர்னாடக காங்கிரஸ் தலைவர்<br />
பரமேஸ்வராவின் பேச்சை அவர்கள் கண்டிப்பதோடு தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்<br />
திறந்துவிட உத்தரவிடும்படி மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.மத்திய அரசு<br />
இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு மதிப்பளித்துத் தமிழகத்துக்கு உரிமையான<br />
தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்னாடக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என<br />
வலியுறுத்துகிறோம்.<br />
காவிரி ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது<br />
பாராட்டத்தக்கதுதான் என்றாலும் காவிரியில் தண்ணீர் வருவதற்கு அதுமட்டுமே<br />
போதுமானதல்ல.உச்ச்நீதிமன்றத்தின்மூலம்  மட்டும் இதைத் தீர்த்துவிட முடியாது<br />
என்பதைத் தமிழக அரசு புரிந்துகொண்டு தமிழக மக்கள் அனைவரும் இந்தப்<br />
பிரச்சனையில் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பதை மத்திய அரசுக்கும் , கர்னாடக<br />
அரசுக்கும் காட்டும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என<br />
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சார்பில் வலியுறுத்துகிறோம்.<br />
இவண்<br />
*தொல்.திருமாவளவன்*<br />
தலைவர்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://vck.in/vck/?feed=rss2&#038;p=3574</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!மே 18ல் எழுச்சித் தமிழர் சூளுரை</title>
		<link>http://vck.in/vck/?p=3578</link>
		<comments>http://vck.in/vck/?p=3578#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 00:00:45 +0000</pubDate>
		<dc:creator>முதல்வன்</dc:creator>
				<category><![CDATA[கூட்டங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://vck.in/vck/?p=3578</guid>
		<description><![CDATA[விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந்தது. வழக்குரைஞர் வீர முத்து தலைமை தாங்கினார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் பேசியதாவது:- விடுதலை போராட்டத்தில் உயிரிழப்பு என்பது எதிர்பாராத ஒன்றாக இருந்தாலும் கூட, சிங்கள இனவெறியர்கள் ஆயுதம் தாங்கியவர்களை மட்டும் படுகொலை செய்யாமல், பாலச்சந்திரன் போன்ற குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் கொன்று குவித்துள்ளனர். விடுதலை உணர்வு உள்ள யாரும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந்தது.<br />
வழக்குரைஞர் வீர முத்து தலைமை தாங்கினார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் பேசியதாவது:-<br />
விடுதலை போராட்டத்தில் உயிரிழப்பு என்பது எதிர்பாராத ஒன்றாக இருந்தாலும் கூட, சிங்கள இனவெறியர்கள் ஆயுதம் தாங்கியவர்களை மட்டும் படுகொலை செய்யாமல், பாலச்சந்திரன் போன்ற குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் கொன்று குவித்துள்ளனர்.<br />
விடுதலை உணர்வு உள்ள யாரும் மிஞ்சக்கூடாது என்பதற்காக பிஞ்சு குழந்தைகளைக்கூட கொன்று குவித்தது தான் இனப்படுகொலைக்கு சாட்சியாக மாறி உள்ளது. போர் நடக்கும் போது உலக நாடுகள் வேடிக்கை பார்த்தாலும், மனித உரிமை ஆர்வலர்களும், ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ளவர்களும் சிங்கள இன வெறியர்கள் நடத்தியது இனப்படுகொலை என்பதை உணர்ந்து வருகிறார்கள்.<br />
தனி ஈழம் தேவை என்பதையும் உணரத் தொடங்கி உள்ளனர். அதற்கு முன்னோட்டமாக தான் அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றும் அளவுக்கு சூழல் வளர்ந்து உள்ளது.<br />
ஆயுதம் ஏந்தி போராடி ஈழத்தை வென்றெடுக்க முயற்சிப்பதை விட சர்வ நாடுகளின் சமுதாயத்தின் ஆதரவை திரட்டி அறவழியில் ஈழத்தை பெறவும், நீதியை பெறுவதுடன், நம் முன்னால் 3 முக்கிய கடமைகள் உள்ளன.<br />
எஞ்சிய தமிழர்களுக்கு மறுவாழ்வு, இனப்படுகொலை குற்றவாளிகளுக்கு தண்டனை, தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்ற 3 சவால்களை எதிர்கொள்வதற்காக தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்லாமல், உலக தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.<br />
அதற்காக விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து போராடுவதுடன், ஒருமித்தகருத்து கொண்டவர்களிடம் கைகோத்து நிற்கும். பொறுமையோடும், சகிப்புத்தன்மையோடும் ஈழ விடுதலை போராட்டத்திற்கான ஆதரவை சர்வதேச அளவில் திரட்டுவோம். சர்வதேச நாடுகளின் ஆதரவு இல்லாமல் தமிழ் ஈழ பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது. எனவே நமக்கிடையே உள்ள முரண்பாடுகளை தள்ளிவைத்துவிட்டு ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.<br />
பொதுச்செயலாளர் ரவிக்குமார், செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு, கொள்கை பரப்பு துணைச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி உள் பட பலர் கலந்து கொண்டனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://vck.in/vck/?feed=rss2&#038;p=3578</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! &#8211; மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை</title>
		<link>http://vck.in/vck/?p=3570</link>
		<comments>http://vck.in/vck/?p=3570#comments</comments>
		<pubDate>Sat, 18 May 2013 10:22:25 +0000</pubDate>
		<dc:creator>சஜன் பராஜ்</dc:creator>
				<category><![CDATA[அறிக்கைகள்]]></category>
		<category><![CDATA[bc]]></category>
		<category><![CDATA[bc reservation]]></category>
		<category><![CDATA[chiruthaigal]]></category>
		<category><![CDATA[mbc]]></category>
		<category><![CDATA[mbc reservation]]></category>
		<category><![CDATA[reservation]]></category>
		<category><![CDATA[thiruma]]></category>
		<category><![CDATA[thirumavalavan]]></category>
		<category><![CDATA[thol. thirumavalavan]]></category>
		<category><![CDATA[thol.thiruma]]></category>
		<category><![CDATA[vck]]></category>
		<category><![CDATA[vck.thirumavalavan]]></category>
		<category><![CDATA[viduthalai chiruthaikal]]></category>
		<category><![CDATA[viduthalai siruthaigal]]></category>
		<category><![CDATA[பிற்படுத்தபட்டோர்]]></category>

		<guid isPermaLink="false">http://vck.in/vck/?p=3570</guid>
		<description><![CDATA[மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.  ஆண்டுக்கு நான்கரை இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது என மத்திய அரசு வரையறுத்திருந்தது.  உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த வருமான வரம்பு உயர்த்தப்பட வேண்டும்.  2011ஆம் ஆண்டோடு நாலரை லட்சம் ரூபாய் என்ற வருமான வரம்பு காலாவதியாகிவிட்டது.  அப்போதே அது உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், மத்திய அரசு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div>மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.  ஆண்டுக்கு நான்கரை இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது என மத்திய அரசு வரையறுத்திருந்தது. <span id="more-3570"></span> உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த வருமான வரம்பு உயர்த்தப்பட வேண்டும்.  2011ஆம் ஆண்டோடு நாலரை லட்சம் ரூபாய் என்ற வருமான வரம்பு காலாவதியாகிவிட்டது.  அப்போதே அது உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், மத்திய அரசு இதில் அக்கறை காட்டவில்லை.</div>
<div></div>
<div>தற்போதுள்ள விலைவாசியைக் கணக்கில்கொண்டு இந்த வருமான வரம்பை ஆண்டுக்கு 12 இலட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கடந்த 2012ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது.  இப்போது அந்த வருமான உச்ச வரம்பு 6 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது எவ்விதத்திலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு உதவியாக அமையாது.  இந்த வருமான உச்ச வரம்பின் காரணமாக உயர்கல்வி நிலையங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தும் ஏராளமான இடங்கள் நிரப்பப்பட முடியாமல் காலியாக உள்ளன.  எனவே, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வருமான உச்ச வரம்பை ஆண்டுக்கு</div>
<div>12 இலட்சம் என உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம். பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும்கூட இதைத்தான் பரிந்துரைத்திருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.</div>
<div></div>
<div>சமூகநீதிப் போராட்டத்தில் எப்போதும் முன்னணி வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகள், இந்தப் பிரச்சனையிலும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தங்களைத் தந்து வருமான உச்ச வரம்பை உயர்த்துவதற்கு முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.</div>
<div></div>
<div>இவண்</div>
<div><strong>தொல்.திருமாவளவன்</strong></div>
<div><strong><br />
</strong></div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://vck.in/vck/?feed=rss2&#038;p=3570</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை &#8211; வன்முறையாளர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சமமாகப் பார்ப்பதா? &#8211; தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கேள்வி</title>
		<link>http://vck.in/vck/?p=3565</link>
		<comments>http://vck.in/vck/?p=3565#comments</comments>
		<pubDate>Sat, 18 May 2013 10:06:49 +0000</pubDate>
		<dc:creator>சஜன் பராஜ்</dc:creator>
				<category><![CDATA[அறிக்கைகள்]]></category>
		<category><![CDATA[144]]></category>
		<category><![CDATA[chiruthaigal]]></category>
		<category><![CDATA[dalith]]></category>
		<category><![CDATA[thiruma]]></category>
		<category><![CDATA[thiruma vilupuram]]></category>
		<category><![CDATA[thirumavalavan]]></category>
		<category><![CDATA[thirumavalavan speech]]></category>
		<category><![CDATA[thol.thiruma]]></category>
		<category><![CDATA[vck.thirumavalavan]]></category>
		<category><![CDATA[viduthalai chiruthaikal]]></category>
		<category><![CDATA[viduthalai siruthaigal]]></category>
		<category><![CDATA[villupuram]]></category>
		<category><![CDATA[அறிக்கை]]></category>
		<category><![CDATA[திருமாவுக்கு தடை]]></category>
		<category><![CDATA[விழுப்புரத்தில் தடை]]></category>

		<guid isPermaLink="false">http://vck.in/vck/?p=3565</guid>
		<description><![CDATA[விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சி நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது.  அண்மையில் மரக்காணத்திலும் கிழக்குக் கடற்கரைச் சாலையிலும் நடைபெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.  இன்று (17-5-2013) விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியிலும் இன்னும் ஓரிரு இடங்களிலும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு நான் ஒப்புதல் அளித்திருந்த நிலையிலும், சமூக அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்குப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும் வன்முறையாளர்களின் சீண்டலுக்கு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div>விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சி நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது. <span id="more-3565"></span> <!--more--><!--more-->அண்மையில் மரக்காணத்திலும் கிழக்குக் கடற்கரைச் சாலையிலும் நடைபெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.  இன்று (17-5-2013) விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியிலும் இன்னும் ஓரிரு இடங்களிலும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு நான் ஒப்புதல் அளித்திருந்த நிலையிலும், சமூக அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்குப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும் வன்முறையாளர்களின் சீண்டலுக்கு துளியும் இடம்கொடுத்துவிடக் கூடாது என்கிற அடிப்படையிலும் அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துள்ளேன்.  அரங்கங்களில் நடைபெறும் திருமணம், காதணி விழா போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு 144 தடையாணை எந்த வகையிலும் பொருந்தாது என்றாலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில், அரங்குகளில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கவில்லை.  ஆனால், அரங்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் நான் பங்கேற்கக் கூடாது என, விழுப்புரம் மாவட்டத்தில் நுழைய எனக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.</div>
<div></div>
<div>ஏற்கனவே தருமபுரி வன்முறையைத் தொடர்ந்து அந்த மாவட்டத்திலும் தடையாணை பிறப்பிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சந்திப்பதற்கும் அவர்களுக்கு ஆடைகள், பாத்திரங்கள் போன்ற பொருளுதவிகளைச் செய்வதற்கும் காவல்துறை இதுவரை எனக்கு அனுமதி வழங்கவில்லை.   25 இலட்சம் ரூபாய் மதிப்பில் புத்தாடைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பிற தட்டுமுட்டுச் சாமான்கள் என வாங்கிவைத்து பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுநாள் வரையில் எங்களால் வழங்கிட இயலவில்லை.</div>
<div></div>
<div>வன்முறை செய்பவர்களையும் வன்முறையால் பாதிக்கப்படுகிறவர்களையும் சட்டம்-ஒழுங்கு என்னும் பெயரில் சமமாக நடத்தும் அரசின் அணுகுமுறை மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.  குறிப்பிட்ட எந்தவொரு சமூகத்திற்கும் எதிராகவோ அல்லது கட்சி, சங்கம் போன்ற அமைப்புகளுக்கு எதிராகவோ விடுதலைச் சிறுத்தைகள் வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்திருக்கிறோமா?  வன்முறைகளைத் தூண்டும்படியோ, சட்டம்-ஒழுங்குக்கு சவால் விடுக்கும் வகையிலோ, அரசின் இறையாண்மையைக் கேள்விககுள்ளாக்கும் வகையிலோ என்றாவது, எங்காவது விடுதலைச் சிறுதைகள் பேசியிருக்கிறோமா? செயல்பட்டிருக்கிறோமா?  எத்தனைப் பாதிப்புகள் நேர்ந்தாலும் உயிர்ச்சேதங்கள் நிகழ்ந்தாலும் சட்டத்தையும் அரசையும் மதித்து ஆட்சியாளர்களிடம் முறையிடுவதையே நடைமுறையாகக் கொண்டிருக்கிற தலித் சமூகத்தையும் விடுதலைச் சிறுத்தைகளையும் வன்முறை சக்திகளோடு இணைத்துப் பார்ப்பதும், இணையாகப் பார்ப்பதும் வேதனைக்குரியதாக உள்ளது. அமைதியாகவும் கட்டுப்பாடாகவும் அரசின் மீது நம்பிக்கை வைத்தும் செயல்பட்டுக்கொண்டிருக்கிற தலித் மக்களையும் விடுதலைச் சிறுத்தைகளையும் இதன்மூலம் பொதுமக்களிடையே வன்முறையாளர்களாகச் சித்தரிக்கும் நிலையே உள்ளது.  சட்டம-ஒழுங்கையும் சமூக அமைதியையும் ஒரு பொருட்டாக மதிக்காத வன்முறை கும்பலுக்கு அஞ்சி, தலித் மக்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் உரிய சனநாயக உரிமைகளை மறுப்பது ஏற்புடையதல்ல.</div>
<div></div>
<div>ஆகவே, தமிழக அரசு சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கான சனநாயகத்தை நசுக்கும் போக்கைக் கைவிட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்கும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்கும் ஏற்ற வகையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருக்கிற தடையாணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.  மேலும், வன்முறைகளுக்குக் காரணமானவர்களை அடையாளம் காண்பதும் அவர்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதும்தான் அரசின் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும் என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.  வடமாவட்டங்களில் சாதியவாதிகளால் தூண்டப்படும் வன்முறைகள் மேலும் பரவாமல் தடுப்பதற்கும், சமூக அமைதியைக் காப்பதற்கும், நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும் வழிவகுத்திட தொலைநோக்குப் பார்வையுடன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://vck.in/vck/?feed=rss2&#038;p=3565</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விடுதலைச் சிறுத்தைகள் மீது வீண் பழி பொய்யை மெய்யாக்கும் முயற்சி வேண்டாம் இறுதியில் வாய்மையே வெல்லும் &#8211; தொல்.திருமாவளவன்</title>
		<link>http://vck.in/vck/?p=3558</link>
		<comments>http://vck.in/vck/?p=3558#comments</comments>
		<pubDate>Thu, 16 May 2013 06:44:06 +0000</pubDate>
		<dc:creator>சஜன் பராஜ்</dc:creator>
				<category><![CDATA[அறிக்கைகள்]]></category>
		<category><![CDATA[chiruthaigal]]></category>
		<category><![CDATA[dalith]]></category>
		<category><![CDATA[dalith people]]></category>
		<category><![CDATA[thiruma]]></category>
		<category><![CDATA[thirumavalavan]]></category>
		<category><![CDATA[thirumavalavan ponvizhaa..]]></category>
		<category><![CDATA[thirumavalavan speech]]></category>
		<category><![CDATA[thol.thiruma]]></category>
		<category><![CDATA[vck]]></category>
		<category><![CDATA[vck.thirumavalavan]]></category>
		<category><![CDATA[viduthalai chiruthaikal]]></category>

		<guid isPermaLink="false">http://vck.in/vck/?p=3558</guid>
		<description><![CDATA[தமிழக சட்டப் பேரவையில் 13-5-2013 அன்று நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய விளக்க உரையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் தொடர் வன்முறைகளுக்கு யார் காரணம் என்பதை மிகவும் அழுத்தந் திருத்தமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.  மாவட்ட வாரியாக, நாள் வாரியாக, வன்முறைகளைப் பட்டியலிட்டு சட்டப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையெல்லாம் விளக்கியிருப்பதுடன் வன்முறைகள் மேலும் தொடருமேயானால், வன்முறைக்குக் காரணமான பாட்டாளி மக்கள் கட்சியைத் தடை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div>தமிழக சட்டப் பேரவையில் 13-5-2013 அன்று நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய விளக்க உரையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில்<span id="more-3558"></span> கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் தொடர் வன்முறைகளுக்கு யார் காரணம் என்பதை மிகவும் அழுத்தந் திருத்தமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.  மாவட்ட வாரியாக, நாள் வாரியாக, வன்முறைகளைப் பட்டியலிட்டு சட்டப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையெல்லாம் விளக்கியிருப்பதுடன் வன்முறைகள் மேலும் தொடருமேயானால், வன்முறைக்குக் காரணமான பாட்டாளி மக்கள் கட்சியைத் தடை செய்யவும் அரசு தயங்காது என தமிழக முதல்வர் எச்சரித்திருக்கிறார்.</div>
<div></div>
<div>இதன் பின்னரும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வட மாவட்டங்களில் நடைபெற்றுள்ள வன்முறைகளுக்கு விடுதலைச் சிறுத்தைகளே காரணம் என்று அவதூறு பரப்புவது வேடிக்கையாக உள்ளது.  அத்துடன், அரசும் விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று துளியளவும் உண்மையில்லாத பொய்யான தகவல்களை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.</div>
<div></div>
<div>விழுப்புரத்தில் தனியார் பேருந்து ஒன்றின் மீது கல் வீசியதாகக் கைது செய்யப்பட்ட தேசிங்கு என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவர் என்று மக்கள் தொலைக்காட்சியில் இடைவிடாமல் பொய்ப் பிரச்சாரம் செய்துவந்த அவர்கள், தற்போது, கைது செய்யப்பட்ட தேசிங்கு அதிமுகவைச் சார்ந்தவர் என்று கூறுகின்றனர்.  குடிபோதையில் அவர் கல்லெறிந்துவிட்டார்; அதற்கு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லையென்று அப்போதே புகார் கொடுத்தவர்கள் காவல்துறையினரிடம் ஊடகத்தினரிடமும் கூறியிருக்கிறார்கள்.  ஆனால், அந்நிகழ்வுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து, முதலில் விடுதலைச் சிறுத்தைகள் என்றும் இப்போது அதிமுக என்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகின்றனர்.</div>
<div>வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே லத்தேரி என்னுமிடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் 15 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் அவர்களை விடுவித்துவிட்டதாகவும் மீண்டும் மீண்டும் அப்பட்டமான பொய்யான தகவல்களைக் கூறி வருகின்றனர். இரு சக்கர வண்டியில் அவ்வழியே வந்த இருவரைப் பிடித்து விசாரித்த காவல்துறையினர் அங்கே நடந்த கல்வீச்சு சம்பவத்துக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்று தெரிய வந்ததும் அவர்களை விடுவித்துவிட்டனர்.  அந்த இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ, அல்லது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களோ இல்லை என்பதுதான் உண்மை.  ஆனாலும், விடுதலைச் சிறுத்தைகள் மீது வேண்டுமென்றே வீண்பழி சுமத்துகின்றனர்.</div>
<div></div>
<div>அதைப் போலவே, குறிஞ்சிப்பாடி அருகே கைது செய்யப்பட்ட இருவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை.</div>
<div>இவற்றை, கட்சி சார்பற்ற யார் வேண்டுமானாலும் நேரிலே சென்று விசாரணை செய்து உண்மையைச் சொல்லட்டும்.</div>
<div></div>
<div>சிறு பாலங்களை வெடிவைத்துத் தகர்த்தது, பேருந்துகள் மற்றும் தனியார் வண்டிகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது, குடிசைகளுக்குத் தீ வைத்தது, கல்வீச்சுத் தாக்குதலில் மூவரைக் கொலை செய்தது போன்ற நடவடிக்கைகளில் வேறு எவரையும் தொடர்புபடுத்தி பொய்யாகக் கூட அவர்களால் குற்றம் சாட்ட இயலவில்லை.</div>
<div></div>
<div>விடுதலைச் சிறுத்தைகளின் மீதும் அரசின் மீதும் வீண்பழி சுமத்திவிட்டு உண்மையை மூடி மறைக்க முயற்சிப்பது தமிழகத்தில் தாங்கள் மட்டுமே புத்திசாலிகள், கெட்டிக்காரர்கள் என்று அவர்கள் எண்ணிக்கொள்வதாகத் தெரிகிறது.  கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டுமே என்பது பழமொழி.  எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக உண்மைகளை மூடி மறைத்தாலும் இறுதியில் வாய்மையே வெல்லும் என்பதுதான் வரலாறாகும்.</div>
<div></div>
<div>ஆகவே, பா.ம.க.வினர் பரியை நரியாக்கவோ பொய்யை மெய்யாக்கவோ முயற்சிக்காமல் உண்மையை ஒத்துக்கொள்வதுதான் துணிச்சல்மிக்க அரசியல் நடவடிக்கையாகும்.  ‘என்னைக் கைது செய்தால் தமிழகம் இப்படித்தான் நிலைகுலைந்து போகும்’ என்று அரசுக்கும் பொதுமக்களுக்கும் சாவல் விடுக்கும் வகையில் திட்டமிட்ட வன்முறைகளை அரங்கேற்றிவிட்டு தற்போது விடுதலைச் சிறுத்தைகளின் மீதும் தமிழக அரசின் மீதும் பழிசுமத்தித் தப்பிக்க முயற்சிப்பது ஏன்?  இந்தியாவிலேயே தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளை மட்டுமே ஓர் அரசியல் உத்தியாகக் கொண்டு இயங்குகிற ஒரே அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான் என்பதை அவர்களின் நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.</div>
<div></div>
<div>1987ஆம் ஆண்டு நடைபெற்ற சாலைமறியல் தொடங்கி, 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது சிதம்பரம் தொகுதியில் நடத்திய வன்முறைகள், தற்போது தருமபுரி, மரக்காணத்தில் நிகழ்த்தியிருக்கிற வன்கொடுமைகள் வரை பா.ம.க.வினரின் வரலாறு என்பது வன்முறை வரலாறாகவே அமைந்திருக்கிறது.  தலித் மக்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளையே தொழிலாகவும் வன்முறைகளையே அரசியல் வாழ்வாகவும் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிற பா.ம.க. மேலும் தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைப்பதற்கு ஏழை-எளிய தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்குத் தயாராகி வருகிறது என்பதையே பா.ம.க. நிறுவனர் இன்று (14-5-2013) வெளியிட்டுள்ள அறிக்கை உறுதிப்படுத்துகிறது.</div>
<div></div>
<div>ஆகவே, தமிழக அரசு சட்டம்-ஒழுங்கு மற்றும் சமூக அமைதியை நிலைநாட்டுவதற்கு உரிய முன்னேற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்.  குறிப்பாக, எளிதில் வன்முறைக்கு இலக்காகும் ஏழை-எளிய தலித் மக்களின் குடியிருப்புகளை அடையாளம் கண்டு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.</div>
<div></div>
<div>இவண்</div>
<div><strong>தொல்.திருமாவளவன் </strong></div>
<div><strong><br />
</strong></div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://vck.in/vck/?feed=rss2&#038;p=3558</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மக்கள் ஒற்றுமை மாநாடு-எழுச்சித் தமிழர் உரை(காணொளி)</title>
		<link>http://vck.in/vck/?p=3552</link>
		<comments>http://vck.in/vck/?p=3552#comments</comments>
		<pubDate>Mon, 13 May 2013 05:16:35 +0000</pubDate>
		<dc:creator>முதல்வன்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://vck.in/vck/?p=3552</guid>
		<description><![CDATA[]]></description>
			<content:encoded><![CDATA[]]></content:encoded>
			<wfw:commentRss>http://vck.in/vck/?feed=rss2&#038;p=3552</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எழுச்சித் தமிழர் பாலிமர் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல்(காணொளி)</title>
		<link>http://vck.in/vck/?p=3555</link>
		<comments>http://vck.in/vck/?p=3555#comments</comments>
		<pubDate>Mon, 13 May 2013 00:00:07 +0000</pubDate>
		<dc:creator>முதல்வன்</dc:creator>
				<category><![CDATA[நேர்காணல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://vck.in/vck/?p=3555</guid>
		<description><![CDATA[]]></description>
			<content:encoded><![CDATA[]]></content:encoded>
			<wfw:commentRss>http://vck.in/vck/?feed=rss2&#038;p=3555</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>காமன்வெல்த் மாநாடு பிரிட்டிஷ் மகாராணியாரின் உதாரணத்தைப் பின்பற்றுக! &#8211; இந்திய அரசுக்கு எழுச்சித் தமிழர் வேண்டுகோள்</title>
		<link>http://vck.in/vck/?p=3545</link>
		<comments>http://vck.in/vck/?p=3545#comments</comments>
		<pubDate>Sat, 11 May 2013 10:52:45 +0000</pubDate>
		<dc:creator>முதல்வன்</dc:creator>
				<category><![CDATA[அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://vck.in/vck/?p=3545</guid>
		<description><![CDATA[இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என பிரிட்டிஷ் மகாராணியார் முடிவுசெய்துள்ளார். காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து மாநாடுகளிலும் கலந்துகொண்ட அவர் இலங்கை மாநாட்டைப் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியதாகும். பிரிட்டிஷ் மகாராணியாரின் இந்த அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில் இந்தியா அம்மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்று நாம் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என பிரிட்டிஷ் மகாராணியார் முடிவுசெய்துள்ளார்.  காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து மாநாடுகளிலும் கலந்துகொண்ட அவர் இலங்கை மாநாட்டைப் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியதாகும்.  பிரிட்டிஷ் மகாராணியாரின் இந்த அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.</p>
<p> காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில் இந்தியா அம்மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்று நாம் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறோம்.  தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் இதைக் கூறி வருகின்றன.  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் திரு. ஜி.கே.வாசன் அவர்களும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்களும்கூட இந்தக் கோரிக்கையை வழிமொழிந்துள்ளனர்.</p>
<p>இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வ தென்பது அங்கு நடைபெற்ற இனப்படுகொலையை அங்கீகரிப்பதாகிவிடும்.  அது மட்டுமின்றி, காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள அத்தனை நாடுகளும் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்படும்.  எனவேதான் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாதெனவும் அவ்வாறு நடத்தப்பட்டால் அதில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது எனவும் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என இந்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.</p>
<p>இவண்<br />
தொல்.திருமாவளவன்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://vck.in/vck/?feed=rss2&#038;p=3545</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எந்த தாஸ் வந்தாலும் சாதி மறுப்பு திருமணங்களை ஒழிக்க முடியாது! மக்கள் ஒற்றுமை மாநாட்டில் தலைவர் திருமா பேச்சு!</title>
		<link>http://vck.in/vck/?p=3541</link>
		<comments>http://vck.in/vck/?p=3541#comments</comments>
		<pubDate>Wed, 08 May 2013 08:55:37 +0000</pubDate>
		<dc:creator>அகரன் விசிக</dc:creator>
				<category><![CDATA[மாநாடுகள்]]></category>
		<category><![CDATA[மக்கள் ஒற்றுமை மாநாடு]]></category>

		<guid isPermaLink="false">http://vck.in/vck/?p=3541</guid>
		<description><![CDATA[சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மக்கள் ஒற்றுமை மாநாடு 07.05.2013 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.,திருமாவளவன் பேசியதாவது, ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்தார். திமுகவுடன் கூட்டணி வைத்தும் படுதோல்வி அடைந்தார். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல், தன் அரசியல் பலத்தை நிருபிப்பதற்கு சாதியை கையில் எடுத்திருக்கிறார். தலித் அல்லாத சாதி அமைப்புகளை ஒன்று சேர்க்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறார். எனக்கும் அவருக்கும் எந்த தனிப்பட்ட மோதல்களும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மக்கள் ஒற்றுமை மாநாடு 07.05.2013 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.,திருமாவளவன் பேசியதாவது,</p>
<p>ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்தார். திமுகவுடன் கூட்டணி வைத்தும் படுதோல்வி அடைந்தார். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல், தன் அரசியல் பலத்தை நிருபிப்பதற்கு சாதியை கையில் எடுத்திருக்கிறார். தலித் அல்லாத சாதி அமைப்புகளை ஒன்று சேர்க்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறார். எனக்கும் அவருக்கும் எந்த தனிப்பட்ட மோதல்களும் கிடையாது.</p>
<p>என்னை அவன், இவன் என்றும், பொறுக்கி என்றும், ரவுடி என்றும் பேசுகிறார். நாடக காதல் நசுக்கும் சட்டம் என்று சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். எந்த தாஸ் வந்தாலும் எந்த வெட்டி வந்தாலும் சாதி மறுப்பு திருமணங்களை ஒழிக்க முடியாது.</p>
<p>ஆனால், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களுக்காகவும் சேர்த்துதான் நான் போராடி கொண்டிருக்கிறேன். திருமாவளவன் சொல்லியோ, தலித் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலே ராமதாசை ஜெயலலிதா கைது செய்யவில்லை. அது ராமதாசுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே இருக்கிற தனிப்பட்ட ஈகோ.</p>
<p>என்னை என்ன வேண்டுமானாலும் அவர் பேசலாம். ஆனால் அந்த அம்மாவைப் பற்றி பேசினால் அவர் சும்மா இருப்பாரா? வழக்குப் போடு என்று ராமதாஸ் சொன்னார். எனக்கே சவாலா என்று அந்த அம்மா வழக்கு போட்டிருக்கிறார். அவர்களுக்குள் எந்த தனிப்பட்ட மோதல்கள் இருந்தாலும், சட்டப்பேரவையில் மரணக்கானம் தொடர்பான விளக்க உரையில் உண்மைகளை முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.</p>
<p>வேண்டுமென்றே விடுதலை சிறுத்தைகளை வம்புக்கு இழுக்கிறார்கள். என்னதான் வம்புக்கு இழுத்தாலும் விடுதலை சிறுத்தைகள் வன்முறையை கையில் எடுக்க தயாராக இல்லை. அறிவு ஆயுதம் ஏந்தி செயல்பட முடிவு எடுத்திருக்கிறோம். அதனால்தான் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் சென்று நான் சந்தித்தேன். அனைத்து தலைவர்களையும் சந்தித்தது கூட்டணி வைக்க முயற்சி என்று கொச்சைப்படுத்துகிறார்கள்.</p>
<p>எங்களுக்கு தேர்தலை பற்றி கவலையில்லை. மக்கள் நலனுக்காகத்தான் மக்கள் ஒற்றுமை மாநாட்டை ஏற்படாடு செய்தோம். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கும், திராவிட கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு தலைவர் திருமாவளவன் பேசினார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://vck.in/vck/?feed=rss2&#038;p=3541</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
