• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Articles posted by முதல்வன்

{விடுதலை நாளிதழ் தலையங்கம்} *விடுதலைச் சிறுத்தைகள் தலைவரின் விவேகமான பேட்டி*

விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் அளித்த விவேகமான பேட்டி ஒன்று ஏடுகளில் வெளி வந்துள்ளது. தேர்தல் கூட்டணியில் இப்பொழுதுள்ள நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதிபடக் கூறி, சந்தேகத்தைக் கிளப்பும் பிராணிகளின்வாயை அடைத்துள்ளார். அக்கப் போர்களை எழுதிக் கல்லாப் பெட்டியை நிரப்பும் ஊடகங்களுக்கு மெல்லுவதற்குத் தேவையில்லாமல் அவலைக் கொடுப்பதற்குப் பதிலாக அவ்வப்பொழுது பளிச் சென ...

மேலும் படிக்க

மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகள் அனுசுயாவிற்கு எழுச்சித் தமிழர் நிதியுதவி

மரக்காணம் வன்முறையில் தீக்கிரையான வீடுகளில் ஒன்று அனுசுயாவின் வீடு ஆகும். அவருக்கு எதிர்வரும் மே 27 அன்று திருமணம் நடைபெறவுள்ளது. அதற்காக வைத்திருந்த பணமும் நகையும் வன்முறையாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. அரசு அறிவித்த உதவித் தொகை தவிர வேறு எந்த உதவியும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அனுசுயாவின் பரிதாப நிலை குறித்து கடந்த மே 22 அன்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் செய்தி வெளியாகியிருந்தது. அதைப் படித்தவுட ...

மேலும் படிக்க

விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து எழுச்சித் தமிழர் வழக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘’விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கடந்த 16-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் விழுப்புரம் மாவட்டத்தில் நான் நுழைவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். நான் சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக உள்ளேன். விழுப்புரம் மாவட்டம் வழியாக தான் எனது தொகுதிக்கு செல்ல வேண்டும். கலெக்டர் பிறப்பித்த தடை உத்தரவால் எனது தொகுதிக்கு செல்லவோ தொக ...

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை:எழுச்சித் தமிழர்

மரக்காணம் கலவரம் தொடர்பாக பா.ம.க.வினர் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும், ஒடுக்கவும் இந்த அரசு தயங்காது என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. தலைவர் கலைஞர் பா.ம.க. நிறுவனர் ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது கூறினார். மேலும் மரக்காணம் கலவரம் தொடர்பாக கலைஞர் கண்டன அறிக்கை எதுவும் விடாதது விடுதலைச் சிறு ...

மேலும் படிக்க

காவிரி டெல்டா பாசன விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்! -எழுச்சித் தமிழர் வலியுறுத்தல்

டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது கேள்விக் குறியாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பை மீண்டும் விசாரிக்கும்படி கோரப்போவதாக கர்னாடக காங்கிரஸ் கூறியிருப்பது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ” கடந்த பா.ஜ.க அரசு காவிரிப் பிரச்சனையில் கர்னாடக மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. நாளொன்றுக்கு பத்தாயிரம் கியூசெக்ஸ் ...

மேலும் படிக்க

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!மே 18ல் எழுச்சித் தமிழர் சூளுரை

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந்தது. வழக்குரைஞர் வீர முத்து தலைமை தாங்கினார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் பேசியதாவது:- விடுதலை போராட்டத்தில் உயிரிழப்பு என்பது எதிர்பாராத ஒன்றாக இருந்தாலும் கூட, சிங்கள இனவெறியர்கள் ஆயுதம் தாங்கியவர்களை மட்டும் படுகொலை செய்யாமல், பாலச ...

மேலும் படிக்க